தேனீக்களாய் வேலை செய்வோம்
நத்தையாய் ஊர்ந்தும் செல்வோம்…
நாயாய் நன்றியோடு இருப்போம்
திருட்டுப் பூனையாயும் இருப்போம்…
அன்னமாய் தேர்ந்தெடுத்து உண்போம்
பன்றியாய் பார்த்ததை எல்லாமும்
தின்போம் …
புறாவாய் ஜோடியாய்க் காதலிப்போம்
தெரு நாயாயும் சுற்றித் திரிவோம் …
கிளியாய்க் கொஞ்சிப் பேசுவோம்
சிங்கமாய் கர்ஜனையும் செய்வோம்…
மயிலாய் அழகு காட்டுவோம்
காட்டு எருமையாயும்
பயமுறுத்துவோம் …
கடவுளாய் கருணை செய்வோம்
சாத்தானாயும் சாதனை செய்வோம்…
மனிதனாய் என்று மாறுவோம்
கொஞ்சமாய் அளந்து வாழ்வோம்…
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment