பல்லாயிரங்காலத்து பயிர் நீ
பல்லவன் பேசிய மொழி நீ
காந்தியை கவர்ந்த மனம் நீ -
என் கம்பன் வளர்த்த மரம் நீ
பாரதி செதுக்கிய சிலை நீ
பாரே போற்றும் புகழ் நீ
இளங்கோ பெற்ற வரம் நீ
. இசையாய் பொழிந்த மழை நீ
வள்ளுவன் வகுத்த வழி நீ
. பலவெளிச்சங்கள் காட்டும் ஒளி நீ
என் தாயும் தந்தையும் வரமே
. தமிழ் என் உயிருக்கு உரமே
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment